Home தாயகச் செய்திகள் வாழைச்சேனையில் விபத்து! ஒருவர் காயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வாழைச்சேனையில் விபத்து! ஒருவர் காயம்!

Share
Share

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதான வீதியில், பஸ் டிப்போவுக்கு அருகாமையில் லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்து இன்று வியாழக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து வந்த லொறி, எதிரே வந்த டிப்பருடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் லொறி சாரதி காயமடைந்து உடனடியாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குப் பின்னர், டிப்பரை ஓட்டிச் சென்ற சாரதி இடத்தைவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மீரிகமவில் ஒருவர் சுட்டுக்கொலை!

மீரிகமவில் அனுமதியின்றி காணி ஒன்றினுள் தூரியன் பழம் பறிக்கச் சென்ற ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்....

புதுக்குடியிருப்பில் விபத்து!குடும்பஸ்தர் ஒருவர் பலி! இளைஞர்கள் இருவர் படுகாயம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில்...

தேசத்தின் குரலுக்கு பாரிஸில் சிலை!

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நினைவு சிலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான...

புலம்பெயர்நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகைதந்து 14 வயது சிறுமியைபாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர்...