Home தாயகச் செய்திகள் சித்துபாத்தியில் இன்றும் 4 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தியில் இன்றும் 4 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன!

Share
Share

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்றும் 4 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதற்கமைய, இதுவரை 37 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் குறித்த புதைகுழியில் இருந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் 30 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 4 எலும்புக்கூட்டு தொகுதிகள் பின்னிப்பிணைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சித்துப்பாத்தி மனித புதைகுழியை அண்மித்த பகுதியில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் மேற்பார்வையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை மாணவர்கள் இந்த அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனைவியை வாளால் வெட்டிபடுகொலை செய்த கணவன்!

குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை...

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம்: பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜெயவர்தன நீக்கம்!

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட  முன்னாள்  அரச...

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு மோட்டார் சைக்கிள்கள் சிக்கின!

புத்தளம், தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து  நடத்திய சோதனையின்போது...

வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைக்க நடவடிக்கை!

ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக்குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60...