Home தாயகச் செய்திகள் சித்துபாத்தி புதைகுழியில் பொம்மையும் மீட்பு! எண்ணிக்கை 33 ஆக அதிகரித்தது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தி புதைகுழியில் பொம்மையும் மீட்பு! எண்ணிக்கை 33 ஆக அதிகரித்தது!

Share
Share

அரியாலை – சித்துப்பாத்தி (செம்மணி அருகே) மனிதப் புதைகுழி அகழ்வில் நேற்றைய தினம் பொம்மை ஒன்றும் சிறுவருக்கான காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் சில எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அரியாலை மனிதப்புதைகுழியில் இரண்டாம் கட்டமாக ஆறாவது நாளாகவும் நேற்றைய தினம் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது, கடந்த ஞாயிற்றுக் கிழமை அடையாளம் காணப்பட்ட புத்தகப்பை என்று நம்பப்படும் நீல நிறபை மீட்கப்பட்டது. இதன் கீழ் பொம்மை ஒன்றும் Bata என்று பொறியிடப்பட்ட சிறுவருக்கான காலணி ஒன்றும் மீட்கப்பட்டன.

மேலும், தொடர்ந்த அகழ்வில் சில மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அவை சிக்கலான நிலையில் காணப்படுவதால் அவற்றின் எண்ணிக்கையை நிபுணர்களால் கணிப்பிட முடியவில்லை. மீட்கப்பட்ட பின்னரே சரியான எண்ணிக்கையை கூறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேசமயம், கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை செம்மணி அகழ்வில் 33 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினமும் அகழ்வுப்பணி தொடரவுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...