Home தென்னிலங்கைச் செய்திகள் உள்ளூராட்சி சபைகள் அமையும் போது தடம் மாறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உள்ளூராட்சி சபைகள் அமையும் போது தடம் மாறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு!

Share
Share

ஆட்சியமைக்கப்பட்டுவரும் புதிய உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகங்கள் அமைக்கப்படும்போது, கட்சி மாறுபவர்கள் அல்லது கட்சி ஒழுக்கத்தை மீறுபவர்கள் தொடர்பில், நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் சட்டத்தில் அதற்கான இடமில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் குறித்த பொது ஆலோசனை நிகழ்வின்போது அவர் இதனை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல இடங்களிலும் கட்சி மாறும் மற்றும் கட்சியின் ஒழுக்கத்தை மீறும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கே, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் இந்த பதிலை வழங்கியுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...