Home தாயகச் செய்திகள் ஓமந்தையில் கிராமத்தவர் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஓமந்தையில் கிராமத்தவர் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!

Share
Share

வவுனியா, ஓமந்தை பகுதியில் பொதுமகன் ஒருவர் மீது இராணுவத்தினர் பெருமளவானோர் சேர்த்து தாக்குதல் நடத்தியதால் பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஓமந்தை கிராம அமைப்புகளின் முக்கிய பதவிகளில் உள்ளவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராமத்தில் கொள்ளைச்சம்பவங்கள் இடம்
பெறுவதால் அக் கிராமங்களில் புதிதாக நடமாடுபவர்களின் அடையாள அட்டையை கிராம அமைப்புகளின் உறுப்பினர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதிதாக நடமாடிய ஒருவரை குறித்த பொதுமகன் வழிமறித்து அவரின்
அடையாள அட்டையை காட்டுமாறு கோரியுள்ளார்.

எனினும் அவர் தான் இராணும் என தெரிவித்து அடையாள அட்டையை
காட்ட மறுத்து சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் குறித்த பொதுமகன் நேற்று முன்தினம் மாலை வயல் காவலுக்காக சென்ற போது கொம்புவைத்தகுளம் இராணுவ முகாம் முன்பாக வழிமறித்த சிவில் உடை தரித்த 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பொது மகன் மீது தாக்குதல் மேற் கொண்ட பின்னர் அவரை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு இராணுவ முகாமுக்குள் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் குறித்த பொதுமகன் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...