Home தாயகச் செய்திகள் ஓமந்தையில் கிராமத்தவர் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஓமந்தையில் கிராமத்தவர் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!

Share
Share

வவுனியா, ஓமந்தை பகுதியில் பொதுமகன் ஒருவர் மீது இராணுவத்தினர் பெருமளவானோர் சேர்த்து தாக்குதல் நடத்தியதால் பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஓமந்தை கிராம அமைப்புகளின் முக்கிய பதவிகளில் உள்ளவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராமத்தில் கொள்ளைச்சம்பவங்கள் இடம்
பெறுவதால் அக் கிராமங்களில் புதிதாக நடமாடுபவர்களின் அடையாள அட்டையை கிராம அமைப்புகளின் உறுப்பினர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதிதாக நடமாடிய ஒருவரை குறித்த பொதுமகன் வழிமறித்து அவரின்
அடையாள அட்டையை காட்டுமாறு கோரியுள்ளார்.

எனினும் அவர் தான் இராணும் என தெரிவித்து அடையாள அட்டையை
காட்ட மறுத்து சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் குறித்த பொதுமகன் நேற்று முன்தினம் மாலை வயல் காவலுக்காக சென்ற போது கொம்புவைத்தகுளம் இராணுவ முகாம் முன்பாக வழிமறித்த சிவில் உடை தரித்த 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பொது மகன் மீது தாக்குதல் மேற் கொண்ட பின்னர் அவரை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு இராணுவ முகாமுக்குள் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் குறித்த பொதுமகன் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...