Home தாயகச் செய்திகள் ஓமந்தையில் கிராமத்தவர் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஓமந்தையில் கிராமத்தவர் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!

Share
Share

வவுனியா, ஓமந்தை பகுதியில் பொதுமகன் ஒருவர் மீது இராணுவத்தினர் பெருமளவானோர் சேர்த்து தாக்குதல் நடத்தியதால் பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஓமந்தை கிராம அமைப்புகளின் முக்கிய பதவிகளில் உள்ளவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராமத்தில் கொள்ளைச்சம்பவங்கள் இடம்
பெறுவதால் அக் கிராமங்களில் புதிதாக நடமாடுபவர்களின் அடையாள அட்டையை கிராம அமைப்புகளின் உறுப்பினர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதிதாக நடமாடிய ஒருவரை குறித்த பொதுமகன் வழிமறித்து அவரின்
அடையாள அட்டையை காட்டுமாறு கோரியுள்ளார்.

எனினும் அவர் தான் இராணும் என தெரிவித்து அடையாள அட்டையை
காட்ட மறுத்து சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் குறித்த பொதுமகன் நேற்று முன்தினம் மாலை வயல் காவலுக்காக சென்ற போது கொம்புவைத்தகுளம் இராணுவ முகாம் முன்பாக வழிமறித்த சிவில் உடை தரித்த 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பொது மகன் மீது தாக்குதல் மேற் கொண்ட பின்னர் அவரை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு இராணுவ முகாமுக்குள் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் குறித்த பொதுமகன் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...