Home தாயகச் செய்திகள் தர்மபுரத்தில் பெருந்தொகை கேரளக் கஞ்சா மீட்பு! பெண் ஒருவர் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தர்மபுரத்தில் பெருந்தொகை கேரளக் கஞ்சா மீட்பு! பெண் ஒருவர் கைது!

Share
Share

கிளிநொச்சி மாவட்டம் தருமபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய
தகவலுக்கமைய நேற்று கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவை இவ்வாறு தர்மபுரம் பொலிஸார்
மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளரான 55வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான விசுவமடு கொழுந்துப்புலவு பகுதியை சேர்ந்த
பெண்ணை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீத மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்
கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கூமாங்குளம் குழப்பம்; தமது தரப்பில் ஐவர் காயம் என்கிறது பொலிஸ்!

வவுனியா, கூமாங்குளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற அமைதியின்மையில் பொலிஸார்...

மன்னாரில் 02 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப் படையால் மீட்பு!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டன என நம்பப்படும் 02 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப்...

இலங்கைக்கான புதிய அமெ. தூதராக எரிக் மேயரை நியமிக்கப் பரிந்துரை – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை...

தேசிய இனங்களின் உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்!

அனைத்து தேசிய இனங்களுக்கும் உரிமைகளை உறுதி செய்யுமாறு கோரி சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்துப்...