கிளிநொச்சி மாவட்டம் தருமபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய
தகவலுக்கமைய நேற்று கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவை இவ்வாறு தர்மபுரம் பொலிஸார்
மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளரான 55வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான விசுவமடு கொழுந்துப்புலவு பகுதியை சேர்ந்த
பெண்ணை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீத மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்
கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
Leave a comment