Home தாயகச் செய்திகள் செம்மணி புதைகுழி; 33 எலும்புக் கூடுகள் மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

செம்மணி புதைகுழி; 33 எலும்புக் கூடுகள் மீட்பு!

Share
Share

செம்மணி மனித புதைகுழியில், நேற்று (29) மாலை வரையான காலப்பகுதியில் 33 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து நீலநிற பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. 

இன்றைய அகழ்வு பணிகளின் போது மேலும் , மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்றைய தினம் வரையில் 33 மனித  எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 மனித  எலும்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை பயணமாகிறார்!

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் திங்கட்கிழமை (21) இலங்கை மற்றும்...

வவுனியாவில் போக்குவரத்துப் பொலிஸார் துரத்தியதால் நபர் ஒருவர் மரணம்! மக்கள் திரண்டதால் பதற்றம்!

வவுனியா மாவட்டம் கூமாங்குளம் பகுதியில் கடந்த இரவு போக்குவரத்து பொலிசார் துரத்திச்சென்று மோட்டார் சைக்கிள் சில்லுக்குள்...

வேம்படி மகளிர் பாடசாலையில் 120 மாணவர்களுக்கு 9 ஏ சித்தி!

வெளியாகியுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில்...