Home தாயகச் செய்திகள் காணாமல் போனோர் அலுவலத்தில் அமைச்சின் தலையீடு எதற்கு? – மன்னிப்புச் சபை கேள்வி!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

காணாமல் போனோர் அலுவலத்தில் அமைச்சின் தலையீடு எதற்கு? – மன்னிப்புச் சபை கேள்வி!

Share
Share

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட உள்ளகக் கட்டமைப்புக்கள் உண்மையிலேயே சுயாதீனமானவை எனின், அவை வெளிவிவகார அமைச்சின் தலையீடு இன்றி ஆணையாளர் வோல்கர் டர்க்கை தனியாகச் சந்திப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்க
வேண்டும் அல்லவா? என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன் பத்திரண கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கடந்த செவ்வாய்க் கிழமை நீதியமைச்சு, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பொறுப்புக்கூறலுக்கான உள்ளகப் பொறிமுறை மற்றும் நல்லிணக்க செயன்முறை குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன் பத்திரண, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட உள்ளகக்
கட்டமைப்புக்கள் உண்மையிலேயே சுயாதீனமானவை எனின், அவை வெளிவிவகார அமைச்சின் தலையீடு இன்றி ஆணையாளர் வோல்கர் டர்க்கை தனியாகச் சந்திப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாறாக வெளிவிவகார அமைச்சு அல்லது நீதியமைச்சு உள்ளடங்களாக அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நிகழக்கூடிய சந்திப்பில் தமது கட்டமைப்புக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆதரவு குறித்தோ அல்லது போதியளவு ஆதரவு வழங்கப்படாமை குறித்தோ காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்புக்களின் அதிகாரிகளால் எவ்வாறு பிரஸ்தாபிக்கமுடியும் என்றும் த்யாகி ருவன்பத்திரண விசனம் வெளியிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து கல்வியை அளவிடும் முறைமை மிகவும் தவறானது – பிரதமர் ஹரிணி!

பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து கல்வியை அளவிடும் முறைமை மிகவும் தவறானது எனவும், அந்த முறைமை...

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை – சிறீதரன் எம்.பி. விசனம்!

“இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்...

தேடப்பட்டுவரும் செவ்வந்தியின் தாய் சிறையில் மரணம்!

பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின்...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறியதமிழக மீனவர்கள் எழுவர் கைது!

தமிழக மீனவர்கள் 7 பேர் யாழ். கடற்பரப்பில் ஒரு படகுடன் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது...