Home தாயகச் செய்திகள் இரண்டு வாரங்களாக யாழில் மாணவியைக் காணவில்லை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இரண்டு வாரங்களாக யாழில் மாணவியைக் காணவில்லை!

Share
Share

பாடசாலைக்கு சகோதரனை ஏற்றச் சென்ற மாணவி காணாமல் போயுள்ளதாக தாயார்
யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம், செல்லர் வீதியில் வசிக்கும் மாணவியான 17 வயதுடைய தனது மகளைக் கடந்த 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என தாயார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

தனது சகோதரனை அழைத்து வருவதற்காக வீட்டிலிருந்து நண்பகல்வேளை மாணவி வழமைபோன்று சென்றுள்ளார். ஆனால், அவர் பாடசாலைக்கு சென்று மகனை ஏற்றிவரவில்லை. அத்துடன், வீட்டுக்கும் வரவில்லை.

இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்தேன். ஆனால் இரு வாரங்கள் ஆகியும் மகள் தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...