Home தென்னிலங்கைச் செய்திகள் 2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

Share
Share

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட படகில் 2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சுமார் 160 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் இருந்ததாக பாதுகாப்பு பிரதிப அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் உரையாற்றிய அவர், ஐஸ் போதைப்பொருளுக்கு மேலதிகமாக 21 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டதாகக் கூறினார்.

இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிப் படகு 5 சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட நிலையில் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், குறித்த படகு கந்தர பகுதியில் இருந்து புறப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.

இந் நிலையில், படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களும், கைதான சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...

இந்த அரசாங்கத்தில் லசந்த கொலைக்கு நீதி கிடைக்காவிடின் கிடைக்காது – ஐ.ம.சக்தி எம்பி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. படுகொலை செய்யப்பட்ட லசந்த...