Home தென்னிலங்கைச் செய்திகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகள்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகள்!

Share
Share

2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அதன்படி 10,000 க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இதற்காகப் பாதிக்கப்பட்டவர்களின் அலுவலகம் மற்றும் காணாமல் போனவர்களின் அலுவலகம் ஆகியவற்றிற்கு ஒரு புதிய வழிமுறைகள் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச காணாமல் போனவர்களின் நினைவு தினம் நாளை நினைவுகொள்ளப்படுகிறது. 

இதனை முன்னிட்டு காணாமல் போனவர்களின் அலுவலகம் இன்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில் வலுக்கட்டாயமாகக் காணாமல் போதல்கள் தற்செயலான சம்பவங்கள் அல்ல. அவை குற்றங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தக் குற்றங்கள் வாழ்வதற்கான உரிமை குடும்ப ஒற்றுமைக்கான உரிமை மற்றும் கண்ணியத்திற்கான உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை வேண்டுமென்றே மீறும் செயலாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

எனவே இவற்றை மறுப்பதோ அல்லது அவர்கள் சார்பாக செய்ய வேண்டிய பணிகளைத் தாமதப்படுத்துவதோ அரசின் பங்கு அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மாறாக நாட்டின் அரசு அதனை அங்கீகரித்து செயல்பட வேண்டும். 

இதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் நீதியைக் கொள்கை அறிக்கையின் மையத்தில் வைத்துள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 

அதற்கமைய 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் தெற்கில் பதிவான 10000 க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் வழக்குகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த விசாரணைகளுக்காக 375 மில்லியன் ரூபாயை செலவிட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ராஜீவ் காந்தியை இந்திய உளவுத்துறை ஏமாற்றியது என்கிறார் மணி சங்கர் ஐயர்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின், இலங்கை தொடர்பான கொள்கையின் சரிவுக்கு இந்திய இராணுவமே காரணம்...

மைத்திரியிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் – உதய கம்மன்பில தெரிவிப்பு!

நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாதுகாப்பு பிரதி...

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க...