Home தென்னிலங்கைச் செய்திகள் விசேட சுற்றிவளைப்பின்போது துப்பாக்கிதாரிகள் 38 பேர் சிக்கினர்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

விசேட சுற்றிவளைப்பின்போது துப்பாக்கிதாரிகள் 38 பேர் சிக்கினர்!

Share
Share

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பல்வேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 38 துப்பாக்கிதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மேற்படி 38 துப்பாக்கிதாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய   27 மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்க உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 263 பேரும், சந்தேகத்தின் பேரில் 328 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விசேட நடவடிக்கையின்போது ரி – 56 ரக துப்பாக்கிகள் 61 , பிஸ்டல் ரக துப்பாக்கிகள் 62, ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் 40 மற்றும்  ஏனைய ரக துப்பாக்கிகள்  1,721 கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரியிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் – உதய கம்மன்பில தெரிவிப்பு!

நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாதுகாப்பு பிரதி...

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க...

இணைய நிதி மோசடி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை...