Home தாயகச் செய்திகள் வவுனியாவில் ஹயஸ் மோதி வயோதிபர் பரிதாப மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வவுனியாவில் ஹயஸ் மோதி வயோதிபர் பரிதாப மரணம்!

Share
Share

வவுனியாவில் ஹயஸ் ரக வாகனம் மோதி வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியா – யாழ். வீதியில் புதிய பஸ் நிலையத்துக்கு அண்மையில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் வவுனியா – யாழ். வீதியில் புதிய பஸ் நிலையம் முன்பாக சென்று கொண்டிருந்த போது வீதியில் சைக்கிளில் பயணித்த வயோதிபருடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...