Home தென்னிலங்கைச் செய்திகள் வரியில்லா வாகன அனுமதிகளுக்கு தொடர்ந்தும் சிக்கல்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வரியில்லா வாகன அனுமதிகளுக்கு தொடர்ந்தும் சிக்கல்!

Share
Share

அரச சேவையின் மூத்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வரியில்லா வாகன அனுமதிகள், எதிர்வரும் பாதீட்டில் மீண்டும் வழங்கப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே வழங்கப்பட்ட சுமார் 23,000 அதிகாரிகளுக்கான அனுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் மேலும் அதிகாரிகள் இந்த வசதிக்குத் தகுதி பெறுகின்றனர்.

எனினும், சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்கான – ஆண்டு இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருப்பு இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த வசதியை நிறுத்தி வைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக, ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாகன இறக்குமதி காரணமாக மொத்த அந்நிய செலாவணி வெளியேற்றம் முதல் எட்டு மாதங்களில் 918 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...