Home தாயகச் செய்திகள் வன்னியின் மூத்த செய்தியாளர் ந.கிருஷ்ணகுமார் காலமானார்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வன்னியின் மூத்த செய்தியாளர் ந.கிருஷ்ணகுமார் காலமானார்!

Share
Share

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் செய்தியாளராக பணியாற்றிய ந.கிருஷ்ணகுமார் இன்று உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

90களின் இறுதிக் காலம் தொடக்கம் புலிகளின்குரல் வானொலியின் செய்தியாளராக இணைந்த கிருஷ்ணகுமார் போர் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் வானொலியின் அலுவலக செய்தியாளராகப் பணியாற்றியிருந்தார்.

போர் மிகத் தீவிரம் பெற்றிருந்தபோதும் கிருஷ்ணகுமார் களச் செய்தி சேகரிப்பில் தயக்கமின்றிச் செயற்பட்டிருந்தார்.

வானொலியில் ஒலிபரப்பாகிய ஊர்சுற்றும் ஒலிவாங்கி நிகழ்ச்சிக்காக ஏராளமான நேர்காணல்களை பதிவு செய்திருந்தார்.

போருக்குப் பின்னரும்  தினக்குரல், வலம்புரி, தமிழ்மிரர் உட்பட்ட ஊடகங்களுக்கான செய்தியாளராகவும் பணியாற்றியிருந்தார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் என்றும் அவருடைய இறுதிச் சடங்கு அக்கராயனில் உள்ள அவருடைய இல்லத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு...

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...