Home தென்னிலங்கைச் செய்திகள் ரணில் – சஜித் அணிகள் இணைந்து செயற்பட முடிவு – வஜிர அபேவர்தன தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ரணில் – சஜித் அணிகள் இணைந்து செயற்பட முடிவு – வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Share
Share

ஆரம்பப் பேச்சுகளின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியானது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் செயற்படுவதற்காகக் குழுவொன்றாகவோ அல்லது அதற்கு நிகரான பொறிமுறையாகவோ இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.

பொதுக் காரணிகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் கடந்த வாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பல கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.

அந்தக் கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய முன்வைக்கப்பட்ட காரணிகளைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது என்று அந்தக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியுடன் வெளிப்படையாக இணைந்து செயற்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வஜிர அபேவர்தன மேலும் கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

போக்குவரத்து சட்டம் கடுமையாக்கப்படுகிறது!

போக்குவரத்து சட்டம் நேற்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக வாகனங்களை...

தேவைப்பட்டால் உரிய நேரத்தில் நாடாளுமன்றம் வருவார் ரணில் – ஐக்கிய தேசியக் கட்சி அதிரடி அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேவைப்பட்டால் சரியான நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைவார் என்று...

இலங்கைக்கு கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த வருடத்தின் செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள்...