Home தென்னிலங்கைச் செய்திகள் ரணிலும் சஜித்தும் அப்பா, மகன் போல் ஒன்றிணையும் சந்தர்ப்பம் வந்துள்ளது என்கிறார் மனோ!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ரணிலும் சஜித்தும் அப்பா, மகன் போல் ஒன்றிணையும் சந்தர்ப்பம் வந்துள்ளது என்கிறார் மனோ!

Share
Share

ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவும் அப்பாவும் மகனும் போன்று என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“அப்பாவும் (ரணில்) மகனும் (சஜித்) ஒன்றிணையும் சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை வெளியில் இருந்து நாம் செய்து வருகின்றோம்.” – என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஓர் இல்லம். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகும்.

நான் ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததில்லை.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் நான் அவருடன் இருந்தேன்.

ஐக்கிய தேசியக் கட்சி உடைந்த போதும் நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருந்தேன் என்பது அவருக்குத் தெரியும்.”

“எதிரணிகள் ஒன்றிணைவதற்கு முற்படும்போது கள்வர்கள் ஒன்றிணைகின்றனர் என ஆளுந்தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இங்கு களவு, மோசடிகளுக்கு இடமில்லை. எனவே, அனைவரும் கள்வர்கள் எனக் கூறுவதை ஆளுங்கட்சி நிறுத்த வேண்டும்.

கள்வர்களைப் பிடிக்க வேண்டும், அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இது தொடர்பான நடவடிக்கைகள் சட்ட பூர்வமாகவே இடம்பெற வேண்டும். கள்வர்கள் யாரென்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...