Home தாயகச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் நாளை தொழில் வாய்ப்பு முகாம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் நாளை தொழில் வாய்ப்பு முகாம்!

Share
Share

யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்புக் கனவை நனவாக்கும் முகமாக நாளை சனிக்கிழமை மாபெரும் தொழில் வாய்ப்பு முகாம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறும் குறித்த தொழில் முகாமில் 30 நிறுவனங்கள் தமது நிறுவனங்களின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கான எதிர்பார்ப்புடன் பங்கேற்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்
விக்னேஸ்வரன் ஐங்கரன் யாழ். ஊடக அமையத்தில் இன்று தெரிவித்தார்.

ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்திய அவர் மேலும் கூறுகையில்,

“பல தொழில் சந்தைகள் நடைபெற்றாலும் இம்முறை நடைபெறும் தொழில் வாய்ப்பு முகாம் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என நம்புகின்றோம்.

இந்த முகாம் ஊடாக முதற்கட்டமாக 150 இளைஞர், யுவதிகளுக்கு உடனடி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலை எதிர்பார்போர் வருகை தரவுள்ளனர்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணியில் இன்று 7 எலும்புக்கூடுகள் அடையாளம்! – ஆடைகள், பாதணிகள் போன்ற தடயப் பொருட்களும் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 7 எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்...

தமிழை எதிரணி கொச்சைப்படுத்துகிறது – அமைச்சர் சந்திரசேகர் கவலை!

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...

பொலிஸ் விசேட குழுவினரின் அறிக்கைக்கு அமைய செம்மணி புதைகுழி தொடர்பில் நடவடிக்கை – அரசாங்கம்!

யாழ் செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்துக்கு...

செம்மணி விவகாரம்; பிரித்தானியா ஆழ்ந்த கவலை!

செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் பிரித்தானியா, இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக, பிரித்தானிய வெளிவிவகார...