Home தென்னிலங்கைச் செய்திகள் யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், மனைவி, மகள் மூவரும் வீட்டிலிருந்து சடலங்களாக மீட்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், மனைவி, மகள் மூவரும் வீட்டிலிருந்து சடலங்களாக மீட்பு!

Share
Share

கண்டி மாவட்டம், யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (ஐக்கிய மக்கள் சக்தி) சம்பிக விஜேரத்ன (வயது – 53), அவரது மனைவி (வயது – 44) மற்றும் மூத்த மகள் (வயது – 16) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பேராதனைப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டுக்குள் வெவ்வேறான இடங்களிலேயே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

இளைய மகள் உயிர் தப்பியுள்ளார் எனத் தெரியவருகின்றது.

இவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது இது கொலைச் சம்பவமா என்ற கோணத்தில் பேராதனைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

OTP தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களை (OTP) திருடுவதை நோக்கமாகக் கொண்ட போலி அழைப்புகள் மற்றும் செய்திகள்...

சாதாரண தரப் பெறுபேறு இன்றி உயர்தர தொழிற்கல்வியில் இணைய வாய்ப்பு!

2025-2026 கல்வியாண்டிற்கான தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது. ...

யாழில் வாள்வெட்டுச் சம்பத்தில் ஒருவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை ஓட்டோவில் வந்த மூவர் குழு வாளால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது....

மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 111!

அரியாலை மனிதப் புதைகுழிகளிலிருந்து நேற்றைய தினமும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன், ஏற்கனவே அடையாளம்...