Home தாயகச் செய்திகள் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

Share
Share

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள அதேவேளை ஆயிரம் குடும்பங்கள் உறவுகள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடைத்தகங்கல் முகாம்களில் 351 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 79 பேரும், கரைதுறைபற்று பிரதேசத்தில் 07 இடைத்தங்கல் முகாம்களில் 118 குடும்பங்களைச் சேர்ந்த முந்நூற்று அறுபது பேரும், மாந்தை கிழக்கு பிரதேசத்தில் ஐந்து இடைத்தங்கல் முகாம்களில் 153 குடும்பங்களைச் சேர்ந்த 516 பேரும், துணுக்காய் பிரதேசத்தில் ஒரு இடைத்தங்கல் முகாமில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 242 குடும்பங்களைச் சேர்ந்த 788 பேரும் என 24 இடைத்தங்கல் முகாம்களில் 891 குடும்பங்களைச் சேர்ந்த 02 ஆயிரத்து 808 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாயாறு பாலம் உடைந்தமையால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வட்டுவாகல் பாலம் சேதமடைந்துள்ளமையால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

விவசாயிகள் இருவர் காணாமல் போயுள்ளனர். மின் சாரம் இல்லை, தொலைபேசி இணைப்புக்கள் செயற்படவில்லை. அனைத்து வீதிகளும் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தகவல்,
அனர்த்த முகாமைத்துவப் பிரிவு,
முல்லைத்தீவு.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...