மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் இலக்க கிராமத்தில் நேற்று (18) மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் துறைநீலாவணை கிராமத்தினை சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
35ஆம் இலக்க கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டிலிருந்து அயல் வீட்டுக்கு மின்சார இணைப்பு வழங்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மின்சாரம் தாக்கிய நபரை உறவினர்களின் உதவியுடன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வேளையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லாவெளி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Leave a comment