Home தாயகச் செய்திகள் மின்சாரம் தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மின்சாரம் தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் மரணம்!

Share
Share

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் இலக்க கிராமத்தில் நேற்று (18) மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் துறைநீலாவணை கிராமத்தினை சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

35ஆம் இலக்க கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டிலிருந்து அயல் வீட்டுக்கு மின்சார இணைப்பு வழங்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மின்சாரம் தாக்கிய நபரை உறவினர்களின் உதவியுடன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வேளையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லாவெளி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...