Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில்விரைவில் நடத்தப் பரிசீலிக்கின்றது அநுர அரசு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில்விரைவில் நடத்தப் பரிசீலிக்கின்றது அநுர அரசு!

Share
Share

பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு பரிசீலித்து வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எல்லை நிர்ணய செயல்முறை முடிவடைந்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்று அரசு முன்னர் கூறியிருந்தது.

எனினும்,

புதிய எல்லை நிர்ணய செயல்முறை சிக்கலானது,  நீண்டது என்பதால், அடுத்த தேர்தலை, 1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின்கீ ழ் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
 
தாமதமின்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு மீது அழுத்தம் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்தத் திட்டத்தை அரசு பரிசீலிக்கின்றது என்றும் கூறப்படுகின்றது.
 
இந்தநிலையில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இந்தியப் பிரதிநிதி மாகாண சபைகள் தேர்தலை நடத்துமாறு அரசை வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...