நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துமாறு சுதந்திரமான மற்றும் நியாயமான
தேர்தலுக்கான மக்கள் செயல்பாட்டு அமைப்பு (பவ்ரல்) அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் பவ்ரல் அமைப்பு இந்த விடயத்தை கோரியுள்ளது.
கடந்த 2014 செப்ரெம்பர் 20 ஆம் திகதியுடன் மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளாக தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளநிலைமை கவலைக்குரியதாக அமைந்துள்ளது என பவ்ரல் அமைப்பு
தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றாலும், பிந்தைய அரசுகள் இதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாமதம், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடையே பெரும் அக்கறையை ஏற்படுத்தியுள்ளது என்றும், மாகாண மட்டத்தில் தேர்தல் நடைமுறையை மீட்டெடுக்கவேண்டிய அவசியம் அதிகரித்துள்ளதாகவும் பவ்ரல் கூறியுள்ளது.
தேர்தல்களை நடத்தத் தவறுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத் தத்துவங்களுக்கும் எதிரானது என பவ்ரல் எச்சரித்துள்ளது.
Leave a comment