Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைகள் தேர்தல்களை நடத்துமாறு பவ்ரல் வலியுறுத்தல்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மாகாண சபைகள் தேர்தல்களை நடத்துமாறு பவ்ரல் வலியுறுத்தல்!

Share
Share

நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துமாறு சுதந்திரமான மற்றும் நியாயமான
தேர்தலுக்கான மக்கள் செயல்பாட்டு அமைப்பு (பவ்ரல்) அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் பவ்ரல் அமைப்பு இந்த விடயத்தை கோரியுள்ளது.

கடந்த 2014 செப்ரெம்பர் 20 ஆம் திகதியுடன் மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளாக தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளநிலைமை கவலைக்குரியதாக அமைந்துள்ளது என பவ்ரல் அமைப்பு
தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள சட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றாலும், பிந்தைய அரசுகள் இதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாமதம், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடையே பெரும் அக்கறையை ஏற்படுத்தியுள்ளது என்றும், மாகாண மட்டத்தில் தேர்தல் நடைமுறையை மீட்டெடுக்கவேண்டிய அவசியம் அதிகரித்துள்ளதாகவும் பவ்ரல் கூறியுள்ளது.

தேர்தல்களை நடத்தத் தவறுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத் தத்துவங்களுக்கும் எதிரானது என பவ்ரல் எச்சரித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார்!

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

எந்தத் தடை வரினும் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படும் – பிரதமர் ஹரிணி உறுதி!

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எதுவும் மறைக்கப்படாது. எந்தத் தடைகள் வந்தாலும் விசாரணைகள்...

செம்மணியில் மேலும் 03 எலும்புக் கூட்டுத் தொகுதிகள்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று திங்கட்கிழமை புதிதாக 03...

இரண்டு வாரங்களாக யாழில் மாணவியைக் காணவில்லை!

பாடசாலைக்கு சகோதரனை ஏற்றச் சென்ற மாணவி காணாமல் போயுள்ளதாக தாயார்யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம்,...