Home தாயகச் செய்திகள் மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 111!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 111!

Share
Share

அரியாலை மனிதப் புதைகுழிகளிலிருந்து நேற்றைய தினமும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 3 எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன.

மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்ட அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நேற்று செவ்வாய்க் கிழமையும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தடயவியல் அகழ்வாய்வு தளம் இல. – 01, தடயவியல் அகழ்வாய்வு தளம் இல. – 02 என்று அடையாளப்படுத்தப்பட்ட புதைகுழிகளில் தொடர்ந்த ஆய்விலேயே நேற்றைய தினம் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

இவற்றுடன், இந்த மனிதப் புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின்
எண்ணிக்கை 111ஆக அதிகரித்தது.

இதேநேரம், நேற்றைய தினம் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன. இவற்றுடன், இதுவரை 99 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மனிதப் புதைகுழியில் நேற்றுடன் 33ஆவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து?

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வது தொடர்பான சட்டவரைவினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற...

மூன்று வருடங்களில் மாணவர்கள் 20 ஆயிரம் பேர் இடைவிலகல்!

கற்றல் நடவடிக்கைகளிலிருந்து கடந்த மூன்று வருடங்களில் மாணவர்கள் 20 ஆயிரம் பேர் இடைவிலகினர் என்று கல்வி,...

பாம்பு தீண்டி யாழில் இளைஞர் மரணம்!

இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்பாம்பு தீண்டி உயிரிழந்தார். புத்தூர் மேற்கில்...

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம்?

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு தயாராக உள்ளதாக வலி. தெற்கு...