Home தாயகச் செய்திகள் மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 111!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 111!

Share
Share

அரியாலை மனிதப் புதைகுழிகளிலிருந்து நேற்றைய தினமும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 3 எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன.

மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்ட அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நேற்று செவ்வாய்க் கிழமையும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தடயவியல் அகழ்வாய்வு தளம் இல. – 01, தடயவியல் அகழ்வாய்வு தளம் இல. – 02 என்று அடையாளப்படுத்தப்பட்ட புதைகுழிகளில் தொடர்ந்த ஆய்விலேயே நேற்றைய தினம் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

இவற்றுடன், இந்த மனிதப் புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின்
எண்ணிக்கை 111ஆக அதிகரித்தது.

இதேநேரம், நேற்றைய தினம் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன. இவற்றுடன், இதுவரை 99 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மனிதப் புதைகுழியில் நேற்றுடன் 33ஆவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெளிநாட்டில் வாழ்வோருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் விரிவுபடுத்தப்பட்டது!

வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக சாரதி...

சிறிதரன் எம்பியின் பதவி பறிக்கப்பட்டு சாணக்கியனிடம் கையளிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில்...

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...