Home தாயகச் செய்திகள் மட்டு. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு குப்பை ஏற்றும் வாகனத்தில் சென்ற தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

மட்டு. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு குப்பை ஏற்றும் வாகனத்தில் சென்ற தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள்!

Share
Share

குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏறி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளின் தவிசாளர்கள் சென்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட ஒருங்கிணப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இந்தநிலையில், செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளின் தவிசாளர்கள், குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏறி இந்தக் கூட்டத்துக்குச் சென்றனர்.

இதுவரையில் தமது சபைகளுக்கான வாகனங்கள் வழங்காத நிலையில் தாம் குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏறிப் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...