Home தாயகச் செய்திகள் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் நால்வர் தென்னிலங்கையில் விபத்தில் சிக்கி மரணம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் நால்வர் தென்னிலங்கையில் விபத்தில் சிக்கி மரணம்!

Share
Share

அனுராதபுரம் – குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் இருந்து பயணித்த வான் ஒன்றே இந்த விபத்தில் சிக்கி இருந்தது.

விபத்தில் காயமடைந்த வானின் சாரதி மற்றும் லொறியின் சாரதி உட்பட 7 பேர் சிகிச்சைக்காக தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வானில் பயணித்த, முல்லைத்தீவு,செம்மலை பகுதியை சேர்ந்த தி.விமலானந்தன் (வயது -38) மற்றும் புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது-29) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது-29) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தேனுயன் என்ற இளைஞர்கள் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த பயணித்தவர்களில் ஏனைய இருவரின் நிலை ஆபத்தாக இருப்பதாக கூறப்படுகின்றது.

வானின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...