Home தென்னிலங்கைச் செய்திகள் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார்!

Share
Share

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து வந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதைக் காண முடிந்ததாகவும் விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வழக்கொன்றுக்காக, நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையினால் நேற்று அவரை கைதுசெய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

அதன்போது, நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மாலைத்தீவு சென்றுள்ளமையினால் அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும், திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் ஒரே விமானத்திலேயே நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...