Home தென்னிலங்கைச் செய்திகள் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார்!

Share
Share

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து வந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதைக் காண முடிந்ததாகவும் விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வழக்கொன்றுக்காக, நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையினால் நேற்று அவரை கைதுசெய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

அதன்போது, நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மாலைத்தீவு சென்றுள்ளமையினால் அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும், திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் ஒரே விமானத்திலேயே நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் – உதய கம்மன்பில!

“அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். எனவே, எதிரணிகள் ஓரணியில் திரண்டால்...

நாமலுக்குப் பிணை!

அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை...

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், மனைவி, மகள் மூவரும் வீட்டிலிருந்து சடலங்களாக மீட்பு!

கண்டி மாவட்டம், யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (ஐக்கிய மக்கள் சக்தி) சம்பிக விஜேரத்ன...

எந்தத் தடை வரினும் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படும் – பிரதமர் ஹரிணி உறுதி!

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எதுவும் மறைக்கப்படாது. எந்தத் தடைகள் வந்தாலும் விசாரணைகள்...