Home தென்னிலங்கைச் செய்திகள் பாதாள உலகக் குழுவில் அங்கம் வகிக்கும் மேலும் 15 பேர் வெளிநாடுகளில் சிக்கினர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பாதாள உலகக் குழுவில் அங்கம் வகிக்கும் மேலும் 15 பேர் வெளிநாடுகளில் சிக்கினர்!

Share
Share

இலங்கையின் பாதாள உலகக் குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மேலும் 15 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கைகள் ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளன என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“இந்தக் குற்றவாளிகள் தற்போது அந்தந்த நாடுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவை நிறைவடைந்தவுடன், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.” – என்றார்.

இதேவேளை, ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், இத்தகைய கைது நடவடிக்கைகள் பாதாள உலகக் குற்றங்களை ஒழிக்கப் பெரும் பங்களிப்பு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை தொடர்பில் நாட்டில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு – இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பணம், குரும்சிட்டி – தெல்லிப்பழை வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது....

தங்காலையைச் சென்றடைந்த மஹிந்த – ஆதரவாளர்கள் பெருமளவில் கூடி வரவேற்பு!

அம்பாந்தோட்டை, தங்காலை – பெலியத்தவிலுள்ள தனது இல்லத்துக்கு இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ...

பிரச்சினைகளைத் தீர்க்க அரசுக்கு திறமையில்லையேல் நாடே அழியும்! – நேபாளத்தின் நிலையை சுட்டிக்காட்டி ரணில் விசேட அறிக்கை!

“நேபாளத்தில் நீண்ட காலமாகக் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. தெற்காசிய பாரம்பரியத்தின்படி, கடுமையான...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு...