யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றார்.
இந்நிலையில், இன்று காலை பலத்த பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்துக்கு அவர் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாவின் 6ஆம் திருவிழா இன்று நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








Leave a comment