Home தென்னிலங்கைச் செய்திகள் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ் சிலாபத்தில் மரத்துடன் மோதி விபத்து! – 21 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ் சிலாபத்தில் மரத்துடன் மோதி விபத்து! – 21 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில்!

Share
Share

சிலாபம் – புத்தளம் வீதியில் தெதுறு ஓயா பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பஸ் விபத்து இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 21 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காகச் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

2029 இல் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்!

2029 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ...

நவாலியில் 147 பேர் படுகொலை; 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான குண்டுத் தாக்குதலின் 30 ஆம் ஆண்டு...

இலங்கைக்கு 30 வீதம் வரி அறிவித்தார் ட்ரம்ப்!

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

தமிழை எதிரணி கொச்சைப்படுத்துகிறது – அமைச்சர் சந்திரசேகர் கவலை!

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...