Home தாயகச் செய்திகள் நல்லூர் கந்தனில் இன்று சிறப்பாக நடைபெற்ற மாம்பழத் திருவிழா!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

நல்லூர் கந்தனில் இன்று சிறப்பாக நடைபெற்ற மாம்பழத் திருவிழா!

Share
Share

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் 22ஆம் நாளான  திருவிழாவான மாம்பழத்  திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்)  இன்று சிறப்பாக நடைபெற்றது.

காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டபப் பூஜையைத்  தொடர்ந்து பிள்ளையாரும் முருகப் பெருமானும் வெளிவீதியுலா வந்தனர்.

இந்த மாம்பழத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். அத்தோடு முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார்.

இதேவேளை, புராணக் கதையை மையமாகக் கொண்டே ஒவ்வொரு வருடமும் இந்தத் திருவிழா இடம்பெற்று வருகின்றது.

அதற்கமைய ஒரு சமயம் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் நாரதர் மாம்பழமொன்றை வழங்கினார்.

அதனை யாருக்குக் கொடுப்பது எனத் தீர்மானிக்க, முதலில் உலகைச் சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தைத் தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும் பிள்ளையாருக்கும், முருகனுக்கும் கூறினர்.

உடனே முருகப் பெருமான் மயில் மீதேறி உலகைச் சுற்றிவரச்  சென்றபோது, பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றி வந்து நீங்களே என் உலகம் எனக் கூறி மாம்பழத்தைப்  பெற்றுக்கொண்டார்.

உலகைச்  சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகை, உடை அனைத்தையும் துறந்த முருகன், ஆண்டிக் கோலத்தில் பழனி மலையில் போய் அமர்ந்தார். இந்தப் புராணக் கதையை மையமாக வைத்தே இந்தத் திருவிழா இடம்பெற்று வருகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...