Home தாயகச் செய்திகள் ஜனாதிபதி செயலகம் முன்பாக மன்னார் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு போராட்டம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஜனாதிபதி செயலகம் முன்பாக மன்னார் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு போராட்டம்!

Share
Share

காற்றாலை மின்சார திட்டம், கனிம மணல் அகழ்வு என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் முன்பாக மன்னார் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘நமது நாடு – நமது மன்னார் – நமது போராட்டத்தின் கோரிக்கைகள்’ என்ற கருப்பொருளின் கீழ் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை உடன் நிறுத்த வேண்டும். மன்னார் மாவட்டத்தில் எந்தவோர் இடத்திலும் கனிம மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது, அமைக்கப்பட்ட (தம்பபன்னி, நறுவிலிக்குளம்) ஆகிய 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகளை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் சுமார் 500இற்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத் திருந்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவத் தயார் – சீனப் பிரதமர்!

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயார் என சீனா உறுதியளித்துள்ளது. மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும்...

மட்டக்களப்பில் விபத்து! மூவர் காயம்!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி...

சங்குப்பிட்டியில் மீட்கப்பட்ட சடலம்; உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியது!

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண் ஒருவரது...

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க...