Home தாயகச் செய்திகள் ஜனாதிபதி செயலகம் முன்பாக மன்னார் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு போராட்டம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஜனாதிபதி செயலகம் முன்பாக மன்னார் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு போராட்டம்!

Share
Share

காற்றாலை மின்சார திட்டம், கனிம மணல் அகழ்வு என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் முன்பாக மன்னார் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘நமது நாடு – நமது மன்னார் – நமது போராட்டத்தின் கோரிக்கைகள்’ என்ற கருப்பொருளின் கீழ் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை உடன் நிறுத்த வேண்டும். மன்னார் மாவட்டத்தில் எந்தவோர் இடத்திலும் கனிம மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது, அமைக்கப்பட்ட (தம்பபன்னி, நறுவிலிக்குளம்) ஆகிய 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகளை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் சுமார் 500இற்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத் திருந்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...