Home தென்னிலங்கைச் செய்திகள் செம்மணிப் புதைகுழிக்குநீதி கிடைக்க வேண்டும் என்கிறது அரசாங்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

செம்மணிப் புதைகுழிக்குநீதி கிடைக்க வேண்டும் என்கிறது அரசாங்கம்!

Share
Share

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென வினவப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கடந்த ஜூன் 29 ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற்றது. அரச தரப்பில் இருந்து சி.ஐ.டி. மற்றும் நீதி அமைச்சால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும். தேவையான சாட்சிகள் முன்வைக்கப்படும். இந்த மனிதப் புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும். வழக்கு விசாரணை இடம்பெறுவதால் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து கல்வியை அளவிடும் முறைமை மிகவும் தவறானது – பிரதமர் ஹரிணி!

பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து கல்வியை அளவிடும் முறைமை மிகவும் தவறானது எனவும், அந்த முறைமை...

இலங்கையைப் பிரிக்கும் முயற்சி தொடர்கின்றது- இந்தியாவை சாடுகிறார் தம்மரத்ன தேரர்!

இலங்கையைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாற்றமின்றி தொடர்கின்றது என்று பேராசிரியர் இந்துராகரே தம்மரத்ன தேரர்...

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை – சிறீதரன் எம்.பி. விசனம்!

“இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்...

தேடப்பட்டுவரும் செவ்வந்தியின் தாய் சிறையில் மரணம்!

பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின்...