Home தாயகச் செய்திகள் சித்துபாத்தி புதைகுழியில் பொம்மையும் மீட்பு! எண்ணிக்கை 33 ஆக அதிகரித்தது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தி புதைகுழியில் பொம்மையும் மீட்பு! எண்ணிக்கை 33 ஆக அதிகரித்தது!

Share
Share

அரியாலை – சித்துப்பாத்தி (செம்மணி அருகே) மனிதப் புதைகுழி அகழ்வில் நேற்றைய தினம் பொம்மை ஒன்றும் சிறுவருக்கான காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் சில எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அரியாலை மனிதப்புதைகுழியில் இரண்டாம் கட்டமாக ஆறாவது நாளாகவும் நேற்றைய தினம் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது, கடந்த ஞாயிற்றுக் கிழமை அடையாளம் காணப்பட்ட புத்தகப்பை என்று நம்பப்படும் நீல நிறபை மீட்கப்பட்டது. இதன் கீழ் பொம்மை ஒன்றும் Bata என்று பொறியிடப்பட்ட சிறுவருக்கான காலணி ஒன்றும் மீட்கப்பட்டன.

மேலும், தொடர்ந்த அகழ்வில் சில மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அவை சிக்கலான நிலையில் காணப்படுவதால் அவற்றின் எண்ணிக்கையை நிபுணர்களால் கணிப்பிட முடியவில்லை. மீட்கப்பட்ட பின்னரே சரியான எண்ணிக்கையை கூறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேசமயம், கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை செம்மணி அகழ்வில் 33 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினமும் அகழ்வுப்பணி தொடரவுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...