Home தாயகச் செய்திகள் சித்துபாத்தி புதைகுழியில் பொம்மையும் மீட்பு! எண்ணிக்கை 33 ஆக அதிகரித்தது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தி புதைகுழியில் பொம்மையும் மீட்பு! எண்ணிக்கை 33 ஆக அதிகரித்தது!

Share
Share

அரியாலை – சித்துப்பாத்தி (செம்மணி அருகே) மனிதப் புதைகுழி அகழ்வில் நேற்றைய தினம் பொம்மை ஒன்றும் சிறுவருக்கான காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் சில எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அரியாலை மனிதப்புதைகுழியில் இரண்டாம் கட்டமாக ஆறாவது நாளாகவும் நேற்றைய தினம் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது, கடந்த ஞாயிற்றுக் கிழமை அடையாளம் காணப்பட்ட புத்தகப்பை என்று நம்பப்படும் நீல நிறபை மீட்கப்பட்டது. இதன் கீழ் பொம்மை ஒன்றும் Bata என்று பொறியிடப்பட்ட சிறுவருக்கான காலணி ஒன்றும் மீட்கப்பட்டன.

மேலும், தொடர்ந்த அகழ்வில் சில மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அவை சிக்கலான நிலையில் காணப்படுவதால் அவற்றின் எண்ணிக்கையை நிபுணர்களால் கணிப்பிட முடியவில்லை. மீட்கப்பட்ட பின்னரே சரியான எண்ணிக்கையை கூறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேசமயம், கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை செம்மணி அகழ்வில் 33 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினமும் அகழ்வுப்பணி தொடரவுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...