Home தென்னிலங்கைச் செய்திகள் சபாநாயகருக்கு எதிராகப் பிரேரணை; கட்சித் தலைவர்கள் விரைவில் முடிவு – எதிரணி எம்.பி. முஜிபூர் ரஹ்மான் தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சபாநாயகருக்கு எதிராகப் பிரேரணை; கட்சித் தலைவர்கள் விரைவில் முடிவு – எதிரணி எம்.பி. முஜிபூர் ரஹ்மான் தெரிவிப்பு!

Share
Share

“சபாநாயகர் மீதான நம்பிக்கை குறைவடைந்து வருகின்றது. எனவே, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள்.”- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை பதவி விலகுமாறு பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.

இந்தச் சம்பவம் நடக்கும்போது அவரே கிழக்கு மாகாணக் கட்டளைத்  தளபதியாக இருந்தார். எனினும், அவர் பதவி விலகவில்லை. அரசும் அவரைப் பதவி நீக்கவில்லை. அதனால்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இந்தப் பிரேரணையையைச் சபாநாயகர் நிராகரித்துள்ளார். சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட சட்ட ஆலோசனையை சபையில் முன்வைக்குமாறு நாம் சபாநாயகரிடம் வலியுறுத்தினோம்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க முடியும் எனச்  சட்டமா அதிபர் கூறினார் என எமக்குத் தகவல் கிடைத்தது. அதனை உறுதிப்படுத்திக்கொள்ளவே ஆவணத்தைக் கோரினோம். எனினும், அது வழங்கப்படவில்லை.

பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர முடியும். எனினும், சபாநாயகர் அரசியல் முடிவொன்றை எடுத்து அதனை நிராகரித்துள்ளார். இது அரசைப் பாதுகாக்கும் செயலாகும். இந்த விடயத்தில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகச்  செயற்பட்டுள்ளார்.

அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது. அப்படி இருந்தும் எதற்காக விவாதத்தக்கு அஞ்ச வேண்டும்? இந்தப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்தால் ஆளுங்கட்சியில் உள்ள சிலருக்குக் கடந்த அரசுகளுடன் இருந்த தொடர்பு அம்பலமாகும். இதனால்தான் ஆளுங்கட்சி அஞ்சுகின்றது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...