Home தென்னிலங்கைச் செய்திகள் சபாநாயகருக்கு எதிராகப் பிரேரணை; கட்சித் தலைவர்கள் விரைவில் முடிவு – எதிரணி எம்.பி. முஜிபூர் ரஹ்மான் தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சபாநாயகருக்கு எதிராகப் பிரேரணை; கட்சித் தலைவர்கள் விரைவில் முடிவு – எதிரணி எம்.பி. முஜிபூர் ரஹ்மான் தெரிவிப்பு!

Share
Share

“சபாநாயகர் மீதான நம்பிக்கை குறைவடைந்து வருகின்றது. எனவே, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள்.”- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை பதவி விலகுமாறு பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.

இந்தச் சம்பவம் நடக்கும்போது அவரே கிழக்கு மாகாணக் கட்டளைத்  தளபதியாக இருந்தார். எனினும், அவர் பதவி விலகவில்லை. அரசும் அவரைப் பதவி நீக்கவில்லை. அதனால்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இந்தப் பிரேரணையையைச் சபாநாயகர் நிராகரித்துள்ளார். சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட சட்ட ஆலோசனையை சபையில் முன்வைக்குமாறு நாம் சபாநாயகரிடம் வலியுறுத்தினோம்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க முடியும் எனச்  சட்டமா அதிபர் கூறினார் என எமக்குத் தகவல் கிடைத்தது. அதனை உறுதிப்படுத்திக்கொள்ளவே ஆவணத்தைக் கோரினோம். எனினும், அது வழங்கப்படவில்லை.

பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர முடியும். எனினும், சபாநாயகர் அரசியல் முடிவொன்றை எடுத்து அதனை நிராகரித்துள்ளார். இது அரசைப் பாதுகாக்கும் செயலாகும். இந்த விடயத்தில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகச்  செயற்பட்டுள்ளார்.

அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது. அப்படி இருந்தும் எதற்காக விவாதத்தக்கு அஞ்ச வேண்டும்? இந்தப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்தால் ஆளுங்கட்சியில் உள்ள சிலருக்குக் கடந்த அரசுகளுடன் இருந்த தொடர்பு அம்பலமாகும். இதனால்தான் ஆளுங்கட்சி அஞ்சுகின்றது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...