Home பிரதான செய்திகள் கொழும்பு துறைமுக வளாகத்தில் 88 எலும்புக் கூடுகள் மீட்பு!
பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

கொழும்பு துறைமுக வளாகத்தில் 88 எலும்புக் கூடுகள் மீட்பு!

Share
Share

கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாரிய புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் குறைந்தது 88 நபர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

புதிதாக நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணிகளின் போது ஜூலை 2024 இல் முதன்முதலில் இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. 

கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ், சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ வழங்கிய தொல்பொருள் நிபுணத்துவத்துடன் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இலங்கையில் இதுவரை நாடு முழுவதும் 17 மனித புதைகுழிகள் பதிவாகியுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சமீபத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...