Home தென்னிலங்கைச் செய்திகள் கொழும்பில் மர்மமாக உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பில் மர்மமாக உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

Share
Share

கொழும்பின் இரு வேறு பகுதிகளில் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரது சடலம் திங்கட்கிழமை (29) பொலிஸாரால் மீட்கப்பட்டன. கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகடே சந்திக்கருகில் உள்ள ஜாடி வாவியிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

பிற்பகல் 5.20 மணியளவில் பொலிஸாருக்கு பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் 35 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க 5 அடி 4 அங்குலம் உயரமான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் இறுதியாக கறுப்பு நிற அறை காட் சட்டையும், கறுப்பு நிற மேற்சட்டையும் அணிந்திருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிவர்தன வீதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

23 வயதுடைய தெஹிவளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொலிஸார் மேற்படி சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...