Home தென்னிலங்கைச் செய்திகள் கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் – நீதிமன்றில் சி.ஐ.டி. தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம் – நீதிமன்றில் சி.ஐ.டி. தெரிவிப்பு!

Share
Share

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  அதிகாரிகள் கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுரவிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பான முறைப்பாட்டைத்  தொடர்ந்தே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஊடக சந்திப்பில், உதய கம்மன்பில சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைச் சிதைக்கக்கூடிய கருத்துக்களைத் தெரிவித்தார் என முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மன்றுரைத்தனர்.

இந்தநிலையில் அந்தக் கருத்துக்கள் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ், குற்றமாகுமா என்பதைத் தீர்மானிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும்  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வாகன விபத்துக்களால் இந்த ஆண்டில் 1778 பேர் மரணம்!

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை, மரணங்களை ஏற்படுத்திய 1,682 வாகன விபத்துகள்...

நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை கைது செய்யுமாறு சி.ஐ.டிக்கு உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை உடனடியாகக் கைது...

குளியாப்பிட்டியில் கோர விபத்து! மாணவர்கள் இருவர் உட்பட மூவர் பலி!!

குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டியில் பல்லேவல பாலத்துக்கருகில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை...

தென்னக்கோனுக்கு பிணை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்...