Home தென்னிலங்கைச் செய்திகள் கம்பளையில் விபத்து! பெண்கள் மூவர் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கம்பளையில் விபத்து! பெண்கள் மூவர் மரணம்!

Share
Share

கம்பளை, தொலுவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கம்பளை நகரில் இருந்து தொலுவ வழி ஊடாக குருநாகலை நோக்கிப்  பயணித்த கார் ஒன்று, பாதசாரிகள் மீது மோதியுள்ளது.

அதன்பின்னர் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீதும் அந்தக் கார் மோதியுள்ளது.

கார் மோதியதால் தூக்கி வீசப்பட்ட பெண்கள் இருவர் மீது லொறியின் பின் டயரும் ஏறியுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த மற்றொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

காரைச் செலுத்திய பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...

கிணற்றில் தவறி வீழ்ந்த வயோதிபப் பெண் அராலியில் மரணம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று தவறி கிணற்றில் விழுந்த நிலையில்...