2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் குழந்தைகள் 47 பேர் சிறைச்சாலையில் உள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஆண் குழந்தைகள் 20 பேரும் பெண் குழந்தைகள் 27 பேருமே இவ்வாறு பெண் கைதிகளுடன் சிறைச்சாலையில் உள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெண்கள் 1483 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெண்கள் 229 பேர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஆவர்.
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெண்கள் 184 பேர் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதி மன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Leave a comment