Home தென்னிலங்கைச் செய்திகள் ஒட்டுசுட்டான் விவகாரம் திட்டமிட்ட செயல் என்கிறார் கம்மன்பில!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஒட்டுசுட்டான் விவகாரம் திட்டமிட்ட செயல் என்கிறார் கம்மன்பில!

Share
Share

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இராணுவ முகாமுக்குள் இளைஞர்கள் சட்டவிரோதமாக பிரவேசித்தமை பிரிவினைவாத தரப்பினரின் திட்டமிட்டசெயலாகவே தெரிவதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முல்லைத்தீவு முத்தையன்கட்டு ராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் மூலம் சில பிரிவினைவாத தரப்பினர் அரசியல் லாபம் ஈட்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.

இதனூடாக அவர்களின் நீண்டகால கனவை நனவாக்க எதிர்ப்பார்க்கின்றனர். வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அங்கிருந்து முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தாக்குதல்கள் மூலம் வடக்கில் இருந்து ராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு முயற்சித்திருந்தார்.

30 வருடமாக உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற போதிலும் புலிகளின் தாக்குதலில் அங்கிருந்து 10 ராணுவ முகாம்களையேனும் அகற்றமுடியவில்லை.எனவே தற்போதும் அவ்வாறான நிலையே மீண்டும் உருவாகியுள்ளது. வேலுப்பிள்னை பிரபாகரன் மேற்கொண்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே இது அமைந்துள்ளது.

வடக்கில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது பிரச்சினையாகும் எனவே அங்கிருந்து ராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என சுமந்திரன் கூறுகிறார்.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு ராணுவ முகாமுக்குள் இடம்பெற்ற சம்பவமானது திட்டமிட்டசெயலாகவே தெரிகிறது. பிரச்சினையொன்றை தோற்றுவிப்பதற்காகவே பிரிவினைவாத தரப்பினர் இளைஞர்களை பலிக்கடாவாக்கியுள்ளனர். ஏனெனில் சுயநினவில் இருக்கும் எவரும் இராணுவ முகாமுக்குள் களவாட செல்லமாட்டார்கள்” இவ்வாறு பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...