Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை!

Share
Share

நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான உரிமங்களை வழங்கும் திட்டம், அடுத்த மாதம் விமான நிலையத்தில் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில், குறித்த திட்டம் முறையாக செயற்படுத்தப்படுமென, மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

நாட்டிற்கு வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்க முடியும்.

இருப்பினும், நாட்டிற்கு செல்லுபடியாகும் தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்கும்போது, சம்பந்தப்பட்ட வெளிநாட்டவரின் ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ள வாகனங்களின் வகைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...