Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

Share
Share

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு பொறிமுறையை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

மிகவும் அவசரமான தேவைகளைக் கண்டறிவதற்காக, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடன் இணைந்து பல்துறைத் தேவைகள் மதிப்பீட்டை மேற்கொள்ள ஐ.நா. நடவடிக்கை எடுத்துள்ளதுடன், உணவு பாதுகாப்பு, சுகாதாரம், நீர், கல்வி, பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் ஆரம்பகால மீட்சி போன்ற துறைகளில் உள்ள தேவைகளைக் ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளது.

தேசிய மீட்பு மற்றும் ஆரம்பகால மீட்சி முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. குழுக்கள் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிரஞ்சே உறுதிப்படுத்தினார்.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அணுகுவதில் சவால்கள் இருந்தபோதிலும், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், வெள்ளம் மற்றும் உள்கட்டமைப்புச் சேதம் காரணமாக இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தபதுளை மாவட்டத்தின் 25 பாதுகாப்பு மையங்களுக்கு குடிதண்ணீரை விநியோகம் செய்துள்ளது.

மேலும், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முப்படைகளுடன் இணைந்து செயல்பட அவசரக் குழுக்களை அனுப்பியுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...