Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையின் பொருளாதார செயலாக்கத்தில் முன்னேற்றம் – IMF!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கையின் பொருளாதார செயலாக்கத்தில் முன்னேற்றம் – IMF!

Share
Share

விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட கடன்மறுசீரமைப்பு செயன்முறையை அடுத்து இலங்கையின் பொருளாதார செயலாக்கம் முன்னேற்றமடைந்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நாணய மற்றும் நிதிச்சந்தைகள் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஜேஸன் வு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள உலகளாவிய நிதியியல் ஸ்திரத்தன்மை தொடர்பான அறிக்கையை வொஷிங்டனில் வெளியிட்டுவைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கையின் செயற்பாடுகள் குறித்துத் திருப்தியடைவதாகவும், இருப்பினும் இந்த சாதகமான சூழ்நிலையானது ‘முழுநிறைவு’ எனும் எண்ணப்பாட்டுக்கு வழிவகுத்துவிடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இலங்கை போன்ற எல்லை நாடுகளின் பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டில், அவை தமது நடைமுறைக்கணக்கு மற்றும் நிதிக்காப்பு ஆகிய அடிப்படைகளை தொடர்ச்சியாக வலுப்படுத்தவேண்டும் என்றும், அதனூடாகவே வெளியக அழுத்தங்களினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறைவடையும் என்றும் ஜேஸன் வு சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதாகவும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...