Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையின் பொருளாதார செயலாக்கத்தில் முன்னேற்றம் – IMF!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கையின் பொருளாதார செயலாக்கத்தில் முன்னேற்றம் – IMF!

Share
Share

விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட கடன்மறுசீரமைப்பு செயன்முறையை அடுத்து இலங்கையின் பொருளாதார செயலாக்கம் முன்னேற்றமடைந்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நாணய மற்றும் நிதிச்சந்தைகள் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஜேஸன் வு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள உலகளாவிய நிதியியல் ஸ்திரத்தன்மை தொடர்பான அறிக்கையை வொஷிங்டனில் வெளியிட்டுவைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கையின் செயற்பாடுகள் குறித்துத் திருப்தியடைவதாகவும், இருப்பினும் இந்த சாதகமான சூழ்நிலையானது ‘முழுநிறைவு’ எனும் எண்ணப்பாட்டுக்கு வழிவகுத்துவிடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இலங்கை போன்ற எல்லை நாடுகளின் பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டில், அவை தமது நடைமுறைக்கணக்கு மற்றும் நிதிக்காப்பு ஆகிய அடிப்படைகளை தொடர்ச்சியாக வலுப்படுத்தவேண்டும் என்றும், அதனூடாகவே வெளியக அழுத்தங்களினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறைவடையும் என்றும் ஜேஸன் வு சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதாகவும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

உண்மையான நண்பனை போல இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியது – இந்தியாவில் இலங்கைப் பிரதமர்!

இருள் சூழ்ந்த நேரத்தில் உண்மையான நண்பனை போல இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியதாக, பிரதமர் ஹரிணி...

நாட்டில் ஒரே நாளில் 4,539 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (15) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,539 பேர்...

காணிகளை ஒப்படைத்தனர் கோப்பாய் பொலிஸார்! யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம்!

கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால்கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது....

வடக்கு மாகாண சபை; வரதாஜப் பெருமாள் தலைமையில் யாழில் கூட்டம்!

வடக்கு மாகாண சபையை இம்முறை தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக கைப்பற்றுவது குறித்து கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில்...