Home தென்னிலங்கைச் செய்திகள் இராஜதந்திரம் என்றால் என்னவென்பது பற்றி மஹிந்தவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் அநுர – இப்படி மொட்டுக் கட்சி உபதேசம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இராஜதந்திரம் என்றால் என்னவென்பது பற்றி மஹிந்தவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் அநுர – இப்படி மொட்டுக் கட்சி உபதேசம்!

Share
Share

“போர்க் காலத்தில் பலம் பொருந்திய நாடுகளுடன் இராஜதந்திரச் சமரில் ஈடுபட்ட தலைவர்தான் மஹிந்த ராஜபக்ஷ. எனவே, இராஜதந்திரம் என்றால் என்னவென்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர, மஹிந்தவிடம் கேட்டு, கற்றுக்கொள்ள வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது :-

“போர்க் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ பல இராஜதந்திரப் பிரச்சினைகளை எதிர்கொண்டார். அப்படியான பிரச்சினைகள் தற்போது வருமானால் இந்த அரசு நடுங்கிவிடும்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மஹிந்த எடுத்த முடிவால் உலகில் பலம் பொருந்திய நாடுகள் ஓரணியில் திரண்டன. இந்நிலையில் அவற்றைக் கையாள்வதற்கு மஹிந்த கையாண்ட இராஜதந்திர, அரசியல் அனுபவத்தை ஒருபோதும் மறக்க முடியாது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன்தான் மஹிந்த இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டார்.

எனவே, நேரம் கிடைக்கும் பட்சத்தில், மஹிந்தவைச் சந்தித்து இராஜதந்திரம் மற்றும் அரசியல் தொடர்பில் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு தற்போதைய ஜனாதிபதி அநுரவுக்குக் கூறுகின்றோம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சட்டமூலம் நிறைவேறியதும் உத்தியோகபூர்வத்திலிருந்து மஹிந்த வெளியேறுவார் – நாமல் தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச...

செம்மணி புதைகுழி விவகாரத்தை இராணுவத்தினர் மீது சுமத்த முயற்சி – சரத் வீரசேகர கவலை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும்...

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஏழு பேர் பணி இடைநிறுத்தம்!

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்ஏழு பேர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார...

சந்திரசேன பிணையில் விடுவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான்...