Home தென்னிலங்கைச் செய்திகள் இராஜதந்திரம் என்றால் என்னவென்பது பற்றி மஹிந்தவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் அநுர – இப்படி மொட்டுக் கட்சி உபதேசம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இராஜதந்திரம் என்றால் என்னவென்பது பற்றி மஹிந்தவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் அநுர – இப்படி மொட்டுக் கட்சி உபதேசம்!

Share
Share

“போர்க் காலத்தில் பலம் பொருந்திய நாடுகளுடன் இராஜதந்திரச் சமரில் ஈடுபட்ட தலைவர்தான் மஹிந்த ராஜபக்ஷ. எனவே, இராஜதந்திரம் என்றால் என்னவென்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர, மஹிந்தவிடம் கேட்டு, கற்றுக்கொள்ள வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது :-

“போர்க் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ பல இராஜதந்திரப் பிரச்சினைகளை எதிர்கொண்டார். அப்படியான பிரச்சினைகள் தற்போது வருமானால் இந்த அரசு நடுங்கிவிடும்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மஹிந்த எடுத்த முடிவால் உலகில் பலம் பொருந்திய நாடுகள் ஓரணியில் திரண்டன. இந்நிலையில் அவற்றைக் கையாள்வதற்கு மஹிந்த கையாண்ட இராஜதந்திர, அரசியல் அனுபவத்தை ஒருபோதும் மறக்க முடியாது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன்தான் மஹிந்த இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டார்.

எனவே, நேரம் கிடைக்கும் பட்சத்தில், மஹிந்தவைச் சந்தித்து இராஜதந்திரம் மற்றும் அரசியல் தொடர்பில் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு தற்போதைய ஜனாதிபதி அநுரவுக்குக் கூறுகின்றோம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெளிநாட்டில் வாழ்வோருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் விரிவுபடுத்தப்பட்டது!

வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக சாரதி...

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...