Home தாயகச் செய்திகள் ஆஸி. முதலீட்டாளரிடமிருந்து நிதி மோசடி! மன்னாரில் இருவர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆஸி. முதலீட்டாளரிடமிருந்து நிதி மோசடி! மன்னாரில் இருவர் கைது!

Share
Share

அவுஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரின் நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில், மன்னாரில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களை, மன்னார் நீதிமன்றில் பிரசன்னப்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

குறித்த இருவரும் 180 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளரால், மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு மற்றும் ஓமந்தை ஆகிய பகுதிகளில், பல வணிகங்களை ஆரம்பிப்பதற்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவருக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியே மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், இந்த சம்பவத்தின் முக்கியசந்தேகநபர் ஒருவரும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...