Home தாயகச் செய்திகள் ஆஸி. முதலீட்டாளரிடமிருந்து நிதி மோசடி! மன்னாரில் இருவர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆஸி. முதலீட்டாளரிடமிருந்து நிதி மோசடி! மன்னாரில் இருவர் கைது!

Share
Share

அவுஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரின் நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில், மன்னாரில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களை, மன்னார் நீதிமன்றில் பிரசன்னப்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

குறித்த இருவரும் 180 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளரால், மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு மற்றும் ஓமந்தை ஆகிய பகுதிகளில், பல வணிகங்களை ஆரம்பிப்பதற்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவருக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியே மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், இந்த சம்பவத்தின் முக்கியசந்தேகநபர் ஒருவரும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வவுனியாவில் 43 பேருக்கு எயிட்ஸ்!

வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ்நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியாமாவட்ட பாலியல்நோய்...

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு...

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...