Home தென்னிலங்கைச் செய்திகள் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய ஏற்பாடு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய ஏற்பாடு!

Share
Share

2015 ஆம் ஆண்டு மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜூன் மகேந்திரன், பிணை முறி மோசடி குற்றச்சாட்டில்விரைவில் கைது செய்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள மகேந்திரன், முறைப்படி கைது செய்யப்பட்டு சட்ட
நடவக்கை எடுப்பதற்கு உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சென்ற ஒகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாட்டில், செப்ரெம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும் அர்ஜூன் மகேந்திரன் இதுவரை முன்னிலையாகவில்லை. இதனால் அவரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச பிடியாணையின் பிரகாரம் அவரை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...