ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் 2026 ஆம் நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் பாதீட்டை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். இது வரவு – செலவுத் திட்ட உரையாகும்.
அதன்பின்னர் வரவு- செலவுத் திட்டம் தொடர்பான (2 ஆம் வாசிப்பு மீதான) விவாதம் நடைபெறும். 2 ஆம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட பின்னர் 3 ஆம் வாசிப்புமீதான விவாதம் நடைபெறும்.
இது அமைச்சுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகளைக் குறிக்கும்.
டிசம்பர் நடுப் பகுதியில் பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.
வரவு- செலவுத் திட்டத்தின் முன்னோடியான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சபையில் முன்வைக்கப்படும். இது முதலாம் வாசிப்பாகக் கருதப்படும்.
இது தேசிய மக்கள் சக்தி அரசின் 2 ஆவது வரவு – செலவுத் திட்டமாகும்.
Leave a comment