Home தென்னிலங்கைச் செய்திகள் அநுர அரசாங்கத்தின் பாதீடு நவம்பர் 07 இல் முன்வைப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அநுர அரசாங்கத்தின் பாதீடு நவம்பர் 07 இல் முன்வைப்பு!

Share
Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் 2026 ஆம் நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் பாதீட்டை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். இது வரவு – செலவுத் திட்ட உரையாகும்.

அதன்பின்னர் வரவு- செலவுத் திட்டம் தொடர்பான (2 ஆம் வாசிப்பு மீதான) விவாதம் நடைபெறும். 2 ஆம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட பின்னர் 3 ஆம் வாசிப்புமீதான விவாதம் நடைபெறும்.

இது அமைச்சுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகளைக் குறிக்கும்.

டிசம்பர் நடுப் பகுதியில் பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.

வரவு- செலவுத் திட்டத்தின் முன்னோடியான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சபையில் முன்வைக்கப்படும். இது முதலாம் வாசிப்பாகக் கருதப்படும்.

இது தேசிய மக்கள் சக்தி அரசின் 2 ஆவது வரவு – செலவுத் திட்டமாகும்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேசத் தரத்தில் அமையவேண்டும் – இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக்...