Home தென்னிலங்கைச் செய்திகள் அநுர அரசாங்கத்தின் பாதீடு நவம்பர் 07 இல் முன்வைப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அநுர அரசாங்கத்தின் பாதீடு நவம்பர் 07 இல் முன்வைப்பு!

Share
Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் 2026 ஆம் நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் பாதீட்டை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். இது வரவு – செலவுத் திட்ட உரையாகும்.

அதன்பின்னர் வரவு- செலவுத் திட்டம் தொடர்பான (2 ஆம் வாசிப்பு மீதான) விவாதம் நடைபெறும். 2 ஆம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட பின்னர் 3 ஆம் வாசிப்புமீதான விவாதம் நடைபெறும்.

இது அமைச்சுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகளைக் குறிக்கும்.

டிசம்பர் நடுப் பகுதியில் பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.

வரவு- செலவுத் திட்டத்தின் முன்னோடியான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சபையில் முன்வைக்கப்படும். இது முதலாம் வாசிப்பாகக் கருதப்படும்.

இது தேசிய மக்கள் சக்தி அரசின் 2 ஆவது வரவு – செலவுத் திட்டமாகும்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...