Home ஒளிப்படங்கள் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் பெருந்திருவிழா கொடியேற்றதுடன் ஆரம்பம் (படங்கள்)
ஒளிப்படங்கள்தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் பெருந்திருவிழா கொடியேற்றதுடன் ஆரம்பம் (படங்கள்)

Share
Share

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா விசேட பூஜைகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பிரதம குரு கணபதீஸ்வரக் குரு தலைமையிலான குருமார் திருவிழா பூஜைகளை நடத்துகின்றனர்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும், 4ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 5ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 6ஆம் திகதி சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவும், 7ஆம் திகதி பட்டுத் தீர்த்தத் திருவிழாவும், 8ஆம் திகதி ஆஞ்சநேயர் மடையும் இடம்பெறவுள்ளது.

திருவிழாவுக்கான சுகாதார வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், பருத்தித்துறை பிரதேச சபையும் மேற்கொண்டுள்ளன.

நிர்வாக ஒழுங்குகளை பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர் தலைமையிலான குழுவும், ஏனைய பணிகளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் மேற்கொண்டுள்ளன.

மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மேற்கொண்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மந்திரிமனையின் வாயிற் கூரைகள் அகற்றப்படுகின்றன!

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள்...

சர்வதேச விசாரணையை பொன்சேகா வலியுறுத்த வேண்டும் – கஜேந்திரகுமார்!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள்தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார்...

சாட்சி இருந்தால் போர்க்குற்றம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்கிறார் பொன்சேகா!

இறுதிப்போரின்போது ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்குரிய சாட்சி இருந்தால் நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று...

யாழில் விபத்து! குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் சொகுசு பஸ் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாசன் பிரேமதாஸ் எனும் மீன்...