Home தென்னிலங்கைச் செய்திகள் கிவுல் ஓயாத் திட்டத்தை அரசியலாக்கவேண்டாம் என்கிறது அரசாங்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கிவுல் ஓயாத் திட்டத்தை அரசியலாக்கவேண்டாம் என்கிறது அரசாங்கம்!

Share
Share

‘கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எவ்வித இனவாத நோக்கமும் கிடையாது. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் குடிதண்ணீர் மற்றும் விவசாயத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்குடனேயே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, இதனை அரசியல் மயப்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம்.’ – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறி விக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீண்டகால நீர்ப்பிரச்சினைக்குத் தீர்வாகவே கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இது தற்போதைய அரசால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல.

கடந்த 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ப்போதைய அமைச்சரவையால் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மகாவலி ‘எல்’ வலயத்துக்கு உட்பட்ட இந்தத் திட்டத்தை 4 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய அப்போது திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொவிட் தொற்று

மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இது பாதியில் கைவிடப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தியாவசியமானது என அடையாளம் காணப்பட்ட ஒரு திட்டத்தையே நாம் தற்போது மீள ஆரம்பிக்கின்றோம்.’ – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் இளைஞர் சுட்டுக்கொலை!

யாழ்ப்பாணம் தீவகம் அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஹயஸ் ரக...

போதைப் பொருட்களுடன் ஒரே நாளில் 788 பேர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய திட்டத்தின்...

வடக்கு – கிழக்கில் கரிநாள்! மக்கள் திரண்டு போராட்டம்‘

இலங்கையின் சுதந்திரநாள் தமிழருக்கு கரிநாள் என்று தெரிவித்து வடக்கு,கிழக்கில் நேற்று போராட்டங்கள் பெரும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டன....

வெளிநாட்டில் வாழ்வோருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் விரிவுபடுத்தப்பட்டது!

வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக சாரதி...